புதுக்கோட்டையில் மத்தாப்பு கொளுத்தி தீபவாளி கொண்டாடிய பொதுமக்கள்
புதுக்கோட்டையில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினர்.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை களையிழந்து போனது காரணம் வைரஸ் தொற்று காரணமாக உறவினர்கள் யாரும் மற்ற உறவினர்கள் வீடுகளுக்கு செல்லாமல் பட்டாசுகள் வெடிக்காமால் புதுத் துணி வாங்குவதற்கு கடைகளுக்கு செல்லாமலும் தொற்று பயம் காரணமாக சென்ற ஆண்டு தீபாவளி கலை இழந்து போன நிலையில் தற்போது தமிழகத்தில் வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை உற்சாகமாக பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்
தீபாவளி பண்டிகையில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது என்று தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதித்து அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் 7 மணி முதல் முதல் 8 மணி வரை பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தமிழக அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பட்டாசுகள் வெடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.