பாரிநகர் விநாயகர்கோயிலில் பங்குனி உத்தர அன்னதான பெருவிழா
புதுக்கோட்டை மாலையீடு பாரிநகரிலுள்ள அருள்மிகு பாரிவிநாயகர்கோயிலில் பங்குனி உத்தர அன்னதான விழா விமரிசையாக நடைபெற்றது
HIGHLIGHTS
பங்குனி உத்தரம்: பாரிவிநாயகர் கோயிலில் சிறப்புவழிபாடு அன்னதான விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாலையீடு பாரிநகரிலுள்ள அருள்மிகு பாரி விநாயகர்கோயிலில் பங்குனி உத்தரத்தைமுன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
பாரிவிநாயகj கோயிலில் பங்குனி உத்தரத்தைமுன்னிட்டு இதையொட்டி, காலையில் அருள் மிகு பாரி விநாயகருக்கு , பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் உற்சவர் முருகன் மலர் அலங்காரத்திலும்அருள் பாலித்தார். இதில், அந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அருள்மிகு பாரிவிநாயகர் ஆலய அறங்காவலர் குழுவினர் மற்றும் பாரிநகர் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஆர்.செந்தில்தேவன்,ஆர். சேகர், கே.ரவி, உறுப்பினர்கள் செய்திருந்தனர்