புதுக்கோட்டை: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்பி திருநாவுக்கரசர்
கறம்பக்குடி , கந்தர்வகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் எம்பி திருநாவுக்கரசர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குள்பட்ட கந்தர்வகோட்டை கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரடியாக பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது பல்வேறு இடங்களில் சாலை வசதிகள் குடிநீர் பிரச்னை மின் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் வழங்கினர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்பட்ட கறம்பக்குடி ,கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தில், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பென்னட் அந்தோணிராஜ், சூர்யா பழனியப்பன, முத்துகிருஷ்ணன், வீரதுரைசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்