முனைவர் விஜயரகுநாதன் எழுதிய "உடலை நலமாக்கும் யோகா" நூல் வெளியீட்டு விழா
Launching Ceremony of the book "Yoga for Health" written by Vijayaragunathan
HIGHLIGHTS
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநர் (ஓய்வு) முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய "உடலை நலமாக்கும் யோகா" எனும் அவது ஏழாவது நூல் வெளியீட்டு விழா (19.06.2028) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். அலுவலர் மன்றத் தலைவர் வி. ராமு, துணைத்தலைவர் ஏ. முத்துக்கருப்பன், செயலர் கே. அம்பிகாபதி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்களவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார்.
முனைவர் டி. சந்திரசேகர், பேராசிரியர்(ஓய்வு)பொ.அண்ணாமலை, வழக்குரைஞர் என்.சி. ராதாகிருஷ்ணன், திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பின் த. சந்திரசேகரன், கே. பாண்டியன் (மின்வாரியம்-ஓய்வு) , நா. விஜயகுமார்(எல்ஐசி), பாரதிதாசன் பல்கலைக்கழக உடல்கல்வி இயக்குநர் முனைவர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலக்கி விமர்சகர் முனைவர் ந. முருகேசபாண்டியன், நூல் குறித்து கருத்துரையாற்றினார். நூலாசிரியர் முனைவர்.நா.விஜயரெகுநாதன் ஏற்புரையாற்றினார். டாக்டர் கே.ஏ. ரமேஷ் வரவேற்புரையாற்றினார். விரிவுரைாளர் சி. செல்வராஜ் நன்றியுரையாற்றினார். விழாவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி அ. அன்புமணவாளன், வாசகர் பேரவைச்செயலர் எஸ். விஸ்வநாதன், அறந்தாங்கி நகர் மன்ற உறுப்பினர் பழனிராஜன், பேராசிரியர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர்