Begin typing your search above and press return to search.
வாகனசோதனை- ரூ.3.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடியில் உள்ள ஒரு தங்க நகைகடைக்கு புதுக்கோட்டை வழியே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 3.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே வாகன சோதனையில் பறக்கும்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பாேது பட்டுக்கோட்டையிலிருந்து பிரபல நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை டெம்போ வாகனத்தில் கொண்டு சென்ற சேலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் நகைக் கடைகளுக்கு ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் டெம்போவில் இருந்த 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6.843 கிலோ கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.