/* */

புதுக்கோட்டையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ,வானக்கன் காடு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற பட்டியல் இன இளைஞரை கடந்த 27ம் தேதி அன்று ஆதிக்க சாதியினர் அடிமை தொழில் செய்ய வேண்டுமென அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்.அதற்கு முழு ஆடியோ ஆதாரத்துடன் அப்போதே, வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வழக்கு பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கரம்பக்குடி காவல்துறையை கண்டித்தும் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Updated On: 1 April 2022 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...