Begin typing your search above and press return to search.
கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக கூறி, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலையில், முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வீட்டின் முன்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்காத அதிமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.