/* */

கொரோனா விதிகளை பின்பற்றி பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட்

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வரும் திங்கட்கிழமை முதல் உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்து காய்கறி மார்க்கெட் இயக்கப்படுகிறது. தற்போது நகரப்பகுதிகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர். இங்கு கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பதில்லை.

இதனால் பேருந்து நிலையத்தில் முழு கொரோனா விதிமுறைகளை பயன்படுத்தி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காய்கறி வாங்கும் போது தொற்று ஏற்படும் என்கிற அச்சம் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

Updated On: 16 May 2021 7:00 AM GMT

Related News