புதுக்கோட்டையில் டீ மொய் விருந்து தொகை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கல்
புதுக்கோட்டை ககெலக்டர் உமாமகேஷ்வரியிடம் டீ மொய் விருந்து நடத்தி வசூல் ஆன தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு டீ கடை அதிபர் வழங்கினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை வம்பன் 4 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் டீ கடை நடத்தி வருகிறார். தனது டீக்கடையில் சில தினங்களுக்கு முன்பு, டீ மொய் விருந்து நடத்தினார். அப்போது டீக் குடிப்பதற்கு வந்த வாடிக்கையாளர்களிடம் டீக்கு பணம் தர வேண்டாம்.
ஆனால் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பணத்தை மொய் விருந்தாக இந்த உண்டியலில் போட்டு விடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஒருநாளில் டீ குடிக்க வந்த நபர்கள் அளித்த மொய் பணம் ரூ 20 ஆயிரம் வசூல் ஆனது. அந்த பணத்தை காசோலையாக மாற்றி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஷ்வரியிடம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
அதேபோல் மரம் நண்பர்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் மரம் கண்ணன் சமுமூக ஆர்வலர் மூர்த்தி உள்ளிட்ட நண்பர்கள் மூலம் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கலெக்டரிடம் வழங்கினர்.