செஸ்ஒலிம்பியாட்: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சதுரங்கம்- வினாடி வினாபோட்டிகள்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சதுரங்கம்- வினாடி வினாபோட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சதுரங்கப் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகளும், மாநில அளவிலான வினாடி வினா போட்டி இணையதளம் வாயிலாகவும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி (21.07.2022) நடைபெற்றது. இப்போட்டியில் சதுரங்கம் விளையாட்டு தொடர்பான வினாடி வினா போட்டியில் 40 நபர்களும், சதுரங்கப் போட்டியில் 10 மாணவிகளும், 36 மாணவர்களும் என மொத்தம் 86 நபர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர்.கணேசன், மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் அடைக்கலவன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.