/* */

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் தூக்கிட்டு தற்கொலை

வங்கி தலைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

புதுக்கோட்டை அருகே கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்து மோசடி வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று தனது வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை கடன் வழங்கியதில் 1.08 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வங்கி செயலாளர் நீலகண்டன் நகை மதிப்பீட்டாளர் கனகவேல் மற்றும் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சென்னையிலுள்ள கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில் இவர்கள் 3 பேரும் மீதும் நாளை விசாரணை நடைபெற இருந்த நிலையில், வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று தனது வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.நீலகண்டன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், வங்கி தலைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வங்கி செயலாளர் நீலகண்டனின் உடலை கீரனூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  6. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  7. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  10. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்