/* */

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்: அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது

HIGHLIGHTS

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்: அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X

அங்கன்வாடி மாநாட்டில் பேசுகிறார்  சிஐடி மாநில தலைவர் அ. சௌந்தரராஜன்

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டுமென அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு பேரணி-பொதுக்கூட்டம் மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தோழர் ஸ்டெல்லா நினைவரங்கில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநில தலைவர் எஸ்.ரத்னமாலா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.சித்திரைச்செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தீர்மானங்களை மாநில நிர்வாகிகள் முன்மொழிந்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.அன்பரசு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாலதி, சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டை நிறைவுசெய்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மா நன்றி கூறினார். மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ஊழியர்களுக்கு ரூ.10,000, உதவியாளர்களுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும். 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி 10 வருடத்திற்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 வருடம் பணிமுடித்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 15 விழுக்காடு அங்கன்வாடி மையங்களில் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு பணியாளர் இரண்டு மையங்களில் பணிசெய்வது இரண்டு மையங்களையும் பாதிக்கும். எனவே, காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி கடுமையான உயர்ந்துவரும் நிலையில் ஒரு குழந்தையின் உணவூட்டு செலவீனம் 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

5 வருடம் பணிமுடித்த தகுதியுள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை திட்டப்பணிகள் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அங்கன்வாடி ஊழியர்களை எல்கேஜி, யுகேஜி வருப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கு உண்டான மொத்த செலவுத் தொகையையும் அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.



Updated On: 22 Aug 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்