மாற்று இடம் வழங்க வேண்டும் - பூ வியாபாரிகள் முதல்வருக்கு கோரிக்கை.
உடனடி தீர்வு..
HIGHLIGHTS
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பல வருடங்களாக பூ மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டதால் கடந்த 26 தேதி நகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது
பூ வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே ஒரு சில இடங்களில் பூக்களை வைத்து விற்பனை செய்து வந்தனர். நேற்று முதல் பூ மார்க்கெட்டில் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது என காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும் படி கூறியுள்ளனர்
இன்று புதுக்கோட்டைக்கு வருகை தர இருந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை நேரடியாக சந்தித்து பூ வியாபாரிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் ரோஜா இல்லத்திற்கே சென்றனர்
அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதால் ரோஜா இல்லத்திற்கு அமைச்சர் வரவில்லை. இதனையடுத்து தற்போது காய்கறி மார்க்கெட் செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக இடத்தை மாற்றி கொடுத்துள்ளது