/* */

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ்

HIGHLIGHTS

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வருக்கு உதவி செய்த.   கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வரை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று உதவிய கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலினுகக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லுக்குழி வாழ் மக்களுக்காக கந்தர்வகோட்டை அருகே கோவிலூர் கிராமம் நத்தம் என கிராம கணக்கில் தாக்கலாகி உள்ள இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்கண்டவாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் மையப்பகுதியை தனிநபர் சுப்பிரமணியன் என்பவருக்கு பட்டா வழங்கி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இடத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பு செய்த இடத்தினை தனி நபரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அந்தப் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதை கண்டித்தும் அந்த இடத்தினை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஈடுபட்டார் .

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருகை தந்த கந்தர்வகோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ் என்பவரிடம் பேச்சு நடத்தி அதிகாரியிடம் அழைத்துச் சென்று அவருடைய கோரிக்கை சரியானது எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முனிராஜ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த முனிராஜ்யிடம் அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதமாக இருந்த முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டதால் மாவட்ட கவுன்சிலருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 22 April 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’