/* */

கீரனூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்ல பாண்டியன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கொரோன வைரஸ் தொற்று மீண்டும் அதிக அளவில் பெருகி வருவதால், பொதுமக்களுக்கு திமுகவினர் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்க வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார்.

அதன்படி இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கீரனூர் கடைவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் திமுகவினர் ஏற்படுத்தினர் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் போஸ் வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்