/* */

ஊருக்குள் காட்டெருமைகள், அச்சத்தில் கிராம மக்கள்

அறந்தாங்கி அருகே காட்டெருமைகள் திடீரென ஊருக்குள் பகுந்தது. இதனைப் பார்த கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இரண்டு காட்டு எருமைகள் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மாடுகளை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சலிட்டதையடுத்து மாடுகள் அருகே இருந்த தென்னந் தோப்பிற்க்குள் புகுந்துள்ளது. சுமார் 8 அடி உயரமுள்ள காட்டெருமைகள், தோட்டத்திற்க்காக போடப்பட்டுள்ள வேலிக்கல்லுக் கால்களை சாதாரணமாக தாண்டிச் சென்றுள்ளது.

மேலும் கல்லுக்கால்களை தலையால் முட்டியும் உடைத்துள்ளது. மேலும் மாடுகள் ஒரே தோட்டத்தில் நில்லாது ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மாடுகளைத் தேடிப்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை பார்த்த மக்கள் தெரிவிக்கையில் மாடுகளை இதுவரை பார்த்திராத அளவில் விஸ்தாரமாகவும், முரட்டுத்தனமாகக் காணப்பட்டது.

வேலிக்கற்களை சாதாரணமாக உடைத்து தள்ளியது, இதனைப் பார்த்தால் மிகவும் அச்சமாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாடுகளைப் பிடித்து, அதற்கு உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Updated On: 24 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு