/* */

அறந்தாங்கி அருகே தொழிலதிபரை கொலை செய்து நகையை திருடிச்சென்ற மர்மகும்பல்

அறந்தாங்கி அருகே கழுத்தை அறுத்து கொலை செய்து 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்

HIGHLIGHTS

அறந்தாங்கி அருகே  தொழிலதிபரை கொலை செய்து நகையை திருடிச்சென்ற  மர்மகும்பல்
X

புதுக்கோட்டை அருகே 100 பவுன் நகைக்காக மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிஜாமுதீன் புகைப்படம்

அறந்தாங்கி அருகே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற மர்ம

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (52) இவர் ஆப்டிக்கல் கடை உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஆயிஷா பீவி இருவருக்கும் ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்தார்.

கணவன் மனைவி இருவர் மட்டும் ஆவுடையார்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்கவராண்டாவில் முகமது நிஜாம் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தாராம் அப்போது வீட்டின் சுற்றுச்சுவரை எகிறி குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் மனைவி ஆயிஷா பீவியின் கைகால்களை கட்டி போட்டுவிட்டு, பீரோ சாவியை தரும்படி கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர் உயிருக்கு பயந்த ஆயிஷாபீவி பீரோல் சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். உடனே சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து கை கால்கள் கட்டப்பட்டுள்ள ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு அளித்த தகவலையடுத்து வந்து பார்த்த உறவினர்கள் முகமதுநிஜாம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டினுள்ளே கட்டிக்கிடந்த ஆயிஷாபீவியை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் வழக்கு பதிந்த மணமேல்குடி காவல்த்துறையினர் தொழில் அதிபர் நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோத காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 100 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 April 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்