/* */

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழகத்தில் தற்ப்போது வேகமாக பரவி வரும் இரண்டாவது அலை கொரொனாவால் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள் 250 குடும்பங்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 250க்கும் மேற்ப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியோடு பொருட்களை பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 16 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?