Begin typing your search above and press return to search.
பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு
பெரம்பலூரில், 2 வீடுகளில் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது நாரணமங்கலம். நேற்றிரவு, மணிவேல், அஞ்சுதம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து, 8 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், செந்தில் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 8 பவுன் நகை 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மணிவேல் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன், பக்கத்து தெருவில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டதகாவும் , எலக்ட்ரிக்கல் வேலை செய்து வரும் செந்தில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.