பெண் காவலரை அதிகாரி தகாத உறவுக்கு அளித்த சூப்பிரண்ட் பணி இடை நீக்கம்
பெரம்பலூரில் பெண் காவலரை அதிகாரியை தகாத உறவுக்கு அளித்த அமைச்சு பணியாளர் பணி இடை நீக்கம் செய்து உத்தரவு.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 5. 9 .2018 முதல்-அமைச்சர் பணியாளர் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர். தற்போது அவர் போலீசாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப் படையை சேர்ந்த திருமணமாகாத பெண் காவலர் ஒருவருக்கு தனக்கு நிலுவையில் உள்ள ஊதிய பணப் பலன்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரி நேரில் சந்தித்து தெரிவித்ததாகவும் அப்போது அந்த பெண் காவலரை அதிகாரி தகாத உறவுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் காவலர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா விசாரணை நடத்தி ஹரிஹரனை பணி மாற்றம் செய்வதற்கு ஆவணங்கள் செய்து வந்தார். இந்நிலையில் டி .ஐ. ஜி. ராதிகா சென்னைக்கு பணியிட மாறுதல் ஆகி சென்று விட்டார். ஹரிஹரன் மீது இதுபோன்ற புகார்கள் ஏற்கனவே வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது புதிய பொறுப்பேற்றிருக்கும் திருச்சி சரக போலீஸ் டிஐஜி சரவண சுந்தர் பெரம்பலூர் மாவட்ட அமைச்சு பணியாளர் ஊதிய பிரிவில் சூப்பிரண்ட் ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.