/* */

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
X

பெரம்பலூர் அருகே கொள்ளை நடந்த வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம். அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் உள்ள அனைவரும் கிரில் கேட்டை பூட்டி விட்டு தூங்கியுள்ளனர். கிரில் கேட் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் தூங்கிய நபர்களின் அறையை பூட்டி பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், ஆரம். ஜிமிக்கி, மோதிரம், செயின் உள்ளிட்ட 223/4 பவுன் தங்க நகையையும், 2 லட்சத்து 62 ஆயிரம் பணம்,மற்றும் 1 ஜோடி வெள்ளி கொலுசையும் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Nov 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  3. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  5. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  6. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  7. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  8. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  9. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!