/* */

பெரம்பலூர்: திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை

பெரம்பலூர் அருகே, திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட தியாகராஜன்.

பெரம்பலூர் அடுத்துள்ள பாளையம் கிராமம், காமராஜர் காலனியைச் சேர்ந்த அமரேசன் மகன் தியாகராஜன் வயது 29, இவருக்கு கடந்த செப்-13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனிடையே, செப்டம்பர் 16 ஆம் தேதி பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில், குளியல் அறைக்கு சென்ற தியாகராஜன் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தியாகராஜன் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட உறவினர்கள் பதறிப்போய், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்தனர்; எனினும், சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார்,

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு