பெரம்பலூர்: திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
பெரம்பலூர் அருகே, திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் அடுத்துள்ள பாளையம் கிராமம், காமராஜர் காலனியைச் சேர்ந்த அமரேசன் மகன் தியாகராஜன் வயது 29, இவருக்கு கடந்த செப்-13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனிடையே, செப்டம்பர் 16 ஆம் தேதி பாளையம் கிராமத்தில் உள்ள வீட்டில், குளியல் அறைக்கு சென்ற தியாகராஜன் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தியாகராஜன் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட உறவினர்கள் பதறிப்போய், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்தனர்; எனினும், சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார்,
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.