/* */

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி வைத்திருந்த லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது
X

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் யோகேஷ்வரன். இவர் 12.09.2021-ம் தேதி கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு சென்னை -திருச்சி பஸ்சில் ஏறினார்.இரவு 09.30 மணிக்கு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தனது இருக்கையில் லேப்டாப்பை பையுடன் வைத்துவிட்டு, டீ குடிக்க இறங்கினார். டீ குடித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது லேப்டாப் பையை காணவில்லை.

இதுபற்றி யோகேஷ்வரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி துரிதமாக செயல்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று பார்க்கும்போது அங்கு லேப்டாப் பையுடன் ஒருவர் தனியாக நிற்பதை கண்ட உதவி ஆய்வாளர் அவரிடம் விசாரிக்க அவர் மேற்படி பஸ்சில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரது மோதி வயது (41), இவர் திருச்சி மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர் ஆவார்.

மோதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து யோகேஷ்வரனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மோதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 13 Sep 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!