பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில் உதவி மின பொறியாளர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் இருந்த கட்டை பையிலிருந்து குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கட்டை பையை திறந்து பார்த்தபோது அதனுள் பிறந்து சுமார் ஒரு மாதமான பெண்குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்று108 ஓட்டுநர் சரவணக்கமார் மற்றும் அவசர மருத்துவ தொழில் நுப்ப வல்லுனர் சத்யா ஆகியோர் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.பெற்றோரே ஒரு மாத பெண் குழந்தையை சாலையில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.