/* */

பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்

பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி;  ஒருவர் படுகாயம்
X
சேதமடைந்த வீடு. 

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம்; இவரது மனைவி ராமாயி (47), கலியபெருமாள் மனைவி கற்பகம் (54), மற்றும் இவரது உறவினர் பூவாயி ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள மாட்டுப்பட்டியை கடையாக மாற்றுவதற்காக ஒரு பகுதியில், கப்பி மண்ணை கொட்டி நிரப்பி வைத்து விட்டு அசந்து சுவற்றின் அருகே உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது, பலமில்லாத ஹலோ பிளாக் சுவர், மூவரின் மீது, இடிந்து விழுந்தது. இதில் ராமாயி, கற்பகம் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பூவாயி, பலத்த காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...