/* */

கடையை சேதப்படுத்திய காட்டு யானை-மக்கள் பீதி

கடையை சேதப்படுத்திய காட்டு யானை-மக்கள் பீதி
X

நீலகிரி மாவட்டத்தில் இரவில் உலா வந்த காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி எனும் பகுதியில் இரவில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த கடையை சேதப்படுத்தியது.கடந்த வாரம் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சம் அடைந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த சிப்ஸ் கடையை சேதப்படுத்தியது. இதனால் கடையில் இருந்தவர்கள் வெளியே வராமல் கடையினுள் தஞ்சமடைந்தனர்.

யானை, கடையின் முன்பு சேதப்படுத்தி செல்லும் காட்சியை கடைக்காரர் தனது செல்போனில் பதிவு செய்துள்ள காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அடிக்கடி யானைகள் உலா வருவதைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Updated On: 17 April 2021 2:38 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...