/* */

கிரிக்கெட் விளையாடி ஓட்டு சேகரித்த எல்.முருகன்!

மத்திய அமைச்சரும், நீலகிரி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் இன்று நீலகிரி மஞ்சூர் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அங்குள்ள இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடினார்.

HIGHLIGHTS

கிரிக்கெட் விளையாடி ஓட்டு சேகரித்த எல்.முருகன்!
X

நீலகிரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் 'எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் திமுகவினருக்கு கவனம் இருக்கும்' என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது: சமூகநீதி பற்றி பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலமாக நமது மக்களின் நம்பிக்கைக்குரிய கடவுளான, ஹெத்தையி அம்மன் கோவிலுக்கு வருகை தராத ஊழல் ராசா, இப்போது தேர்தல் வந்ததும் தேடிச் சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழை வைத்து திமுகவினர் அரசியல் லாபம் தேடி வருகின்றனர். எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் திமுகவினருக்கு கவனம் இருக்கும். தமிழக முதல்வர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டும் தான். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழரின் பண்பாட்டை பேசி வருகிறார். தி.மு.க, எம்.பி ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மஞ்சூர் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அங்குள்ள இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடினார். தக்கர் பாபா நகர் செல்லும் வழியில் பூண்டு தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

Updated On: 31 March 2024 2:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்