/* */

உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண் கைது

உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண் கைது
X

மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட மோனிஷா.

முழு ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் திறக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்தி உதகை சோலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்த மோனிஷா (23) என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உதகை அருகே சோலூர் பகுதியை சேர்ந்த பெண்மணி மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் புதுமந்து ஆய்வாளர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, உதகை அருகே உள்ள சோலூர் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Jan 2022 2:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?