/* */

உதகையில் லாரிகள் வேலை நிறுத்தம்: கேரட் தொழில் கடும் பாதிப்பு

உதகையில் லாரி ஓட்டுநரை தாக்கிய கேரட் அறுவடைக்கு செல்லும் லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

உதகையில் லாரிகள் வேலை நிறுத்தம்: கேரட் தொழில் கடும் பாதிப்பு
X

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள்.

உதகையில் கேரட் அறுவடை பணிக்குச் செல்லக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இந்நிலையில் லாரி ஓட்டுனர் ஒருவர் தனது லாரியை தூய்மைப்படுத்த தண்ணீர் தெளிக்கும்போது பெண் கூலித்தொழிலாளி ஒருவர் மீது தண்ணீர் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பெண் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவருடன் இருந்த மற்ற மூவரும் லாரி ஓட்டுநரை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து லாரி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கேரட் அறுவடைக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்