/* */

திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு

வெள்ளிக்கிழமை முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்ட திருமுருக பக்தர்கள் பேரவை சார்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. வருகிற மாதங்கள் விழா காலங்களாக உள்ளது. வருகிற அக்டோபர் 7-ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. இதையொட்டி பெண்கள் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு செய்வதும், திருவிளக்கு வழிபாடு செய்வதும் வழக்கம். எனவே, வார நாட்களை போல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 29 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்