/* */

உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

உதகையில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
X

பைல் படம்.

உதகை படகு இல்லம் அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவா என்பவர் பரத் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளதாகவும் இதையடுத்து இருவருக்கும் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். பின்பு ஆத்திரமடைந்த பரத் சிவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் பரத்தை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக உதகையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!