/* */

உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

ஆதரவற்றமற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

HIGHLIGHTS

உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
X

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசும் போது, பள்ளி செல்லும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கிராம, வட்டார, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் இளைஞர் நீதி குழும முதன்மை நடுவர் பாரதிராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2021 9:19 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்