Begin typing your search above and press return to search.
உதகை நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு
உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
HIGHLIGHTS
ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் அரசு தாவரவியல் பூங்கா , சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், ஏடிசி பேருந்து நிலையம் உள்ளிட்ட சாலைகளில் நகராட்சி வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.