/* */

உதகையில் இந்து முன்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் இந்து முன்ணனி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உதகையில் இந்து முன்ணனி  சார்பில் ஆர்ப்பாட்டம்
X
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழக கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட கோரி இந்து முன்னணி சார்பில் உதகை ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்க கூடாது. அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும். தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட்டு கோவில்களை காக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொட்டும் மழையில் பதாகைகளை ஏந்தி இந்து முன்ணனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்