/* */

நீலகிரியில் கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்கம்

நீலகிரியில் மழை நீர் செல்லக் கூடிய அனைத்து கால்வாய்களையும் தூர் வாரும் பணியை வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நீலகிரியில் கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்கம்
X

கால்வாயை தூர்வாரும் பணியை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்.

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் உதகையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பிரதான மழை நீர் செல்லக் கூடிய கால்வாய்களை தூர்வாரும் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.

உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மூன்று கிலோமீட்டர் சிறிய கால்வாய்கள் 6.885 கிலோமீட்டர் மற்றும் சிறு பாலங்கள் 40 எண்ணிக்கைகள் உள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது பெய்யும் கனமழையின் காரணமாக நகர்ப்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க தமிழக முதலமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மழைநீர் செல்லும் பிரதான கால்வாய்கள் தூர்வாரும் பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார் அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த உள்ள கால்வாய்களை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன என தெரிவித்தார்.

கால்வாய்களை தூர் வரும் இந்தப் பணியானது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்ன சென்ட் திவ்யா, துணை ஆட்சியர் மோனிகா ரானா, நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். கால்வாய் தூர்வாரும் பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 20 Sep 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்