/* */

உதகையில் கல்லறை திருநாள் உறவினர்கள் நினைவஞ்சலி

இறந்தோருக்காக குறிக்கப்பட்ட வசனங்கள் பைபிளில் இருந்து வாசிக்கப்பட்டு நற்செய்தி கூறப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் கல்லறை திருநாள் உறவினர்கள் நினைவஞ்சலி
X

கல்லறை திருநாள்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். கல்லறை திருநாளை ஒட்டி உதகை மேரீஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இறந்தவர்களுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இறந்தோருக்காக குறிக்கப்பட்ட வசனங்கள் பைபிளில் இருந்து வாசிக்கப்பட்டு நற்செய்தி கூறப்பட்டது. காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Updated On: 2 Nov 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?