/* */

மத்திய அரசை கண்டித்து உதகையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் மூலம் கோஷம் எழுப்பப்பட்டது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து உதகையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மண்டல அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஊட்டி நல வாரியங்களை சீர்குலைக்க கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்