/* */

ஊட்டியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு; மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில் எய்ட்ஸ் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஊட்டியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு;  மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
X

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், மாணவ மாணவியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே எச்.ஐ.வி. வைரஸ், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட்டது. இதை போலீஸ் எஸ்.பி பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி யூனியன் சர்ச் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், தமிழகம் சாலை வழியாக மீண்டும் எச்.ஏ.டி.பி. மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து, 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றோர் விவரம் வருமாறு

மாணவர்கள் பிரிவில், ஊட்டி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாழ்வின் ஆகியோர் முதல் மற்றும் 3-ம் இடத்தை பிடித்தனர். தனியார் கல்லூரியை சேர்ந்த டிவின்ஜோ நாதன் 2-ம் இடம் பிடித்தார்.

மாணவிகள் பிரிவில், தனியார் கல்லூரியை சேர்ந்த ஆர்த்தி, லாவண்யா, அபிகெயில் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டீன் பத்மினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் இந்திரா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு அலுவலர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Aug 2023 4:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்