/* */

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு

5 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

HIGHLIGHTS

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
X

பைல் படம்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார் ஓட்டுனர் கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடியும் நிலையில், மீண்டும் 5 நாட்களுக்கு போலீஸ் காவலில் விசாரணை செய்ய மகிளா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் மீது சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை சொல்ல விடாமல் தடுத்தல், உட்பட மொத்தம் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணையில் கார் ஓட்டுநரின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் சேலத்தில் கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் கனகராஜ்ன் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து இன்றுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில் உதகை மகிளா நீதிமன்றத்தில் தனபாலை போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும் மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 5 நாள் விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனிடைய கனகராஜன் உறவினர் ரமேஷிற்கு நாளையுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில் அவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிகிறது.

Updated On: 1 Nov 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்