/* */

கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது

நீலகிரி மாவட்டத்தில் யானை தந்தம், புலிநகம், மான் கொம்புகள் போன்றவைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட  நாகராஜுடன் வனத்துறை அலுவலர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கைவினை பொருட்கள்.

கோத்தகிரி :

கோத்தகிரியில் யானை தந்தங்களில் செய்த கைவினைப் பொருட்களை உட்பட வனவிலங்குகளின் தோல் மற்றும் எலும்புகளை கொண்டு கைவினைப் பொருட்களை செய்து பல லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். யானை தந்தம் மற்றும் எலும்புகளில் செய்த விலை உயர்ந்த கைவினை பொருட்களை அவரிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (73). இவர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள், வாசனை திரவியங்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வின் போது வன விலங்குகளின் எலும்புகள் மற்றும் யானையின் தந்தம் போன்ற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்து வந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவர் அளித்த தகவலின் பேரில் கோத்தகிரி பகுதியிலும் இதே போன்று யானையின் தந்தம் மற்றும் வனவிலங்குகளின் தோல் , எலும்புகளை கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து ஒருவர் விற்பனை செய்து வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீலகிரி நீலகிரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து நேற்று மாலை நாகராஜ் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டில் யானை தந்தங்கள் மற்றும் வனவிலங்குகளின் தோல், எலும்புகளில் செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர மான்கொம்பு உட்பட விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகளில் செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் புலித்தோல், புலி நகம் போன்ற பொருட்களை பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 11 Aug 2021 2:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  2. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  3. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  4. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  6. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  8. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  9. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  10. சினிமா
    'குக் வித் கோமாளி' சீசன் 5! இவங்கள்லாம் இருக்காங்களா?