/* */

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இராணுவம்சார்பில நிழற்குடை

தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட்ஜெனரல் அருண் கலந்துகொண்டு அப்பகுதிமக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கினார்

HIGHLIGHTS

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இராணுவம்சார்பில நிழற்குடை
X

தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் 

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட குன்னூர் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிழல்குடை திறப்பு விழாவில் தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட போது நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கியும், விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ராணுவம் சார்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி, நன்றி தெரிவித்து, ஒருவருட காலத்திற்கு ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு மாதங்களில் இருமுறை மருத்துவ முகாம் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கிராம மக்களின் பயனுக்காக ராணுவம் அமைத்த புதிய நிழற்கூரை திறப்பு விழா மற்றும் சிறப்பு மருத்துவமுகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவில் தென்பிராந்திய ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்து கொண்டு, விபத்தின்போது மீட்பில் உதவிய சந்திரன் என்பவரை அழைத்து, நிழற்கூரையை திறக்க வைத்தார். இதற்கான கல்வெட்டை, வண்டிச்சோலை பஞ்சாயத்து தலைவி மஞ்சுளா திறந்து வைத்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Updated On: 28 Feb 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’