/* */

நீலகிரியில் வரும் 27 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்,சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 777 மையங்களில் நடக்கிறது.

HIGHLIGHTS

நீலகிரியில் வரும் 27 ம் தேதி  போலியோ சொட்டு மருந்து முகாம்
X

நீலகிரி மாவட்டத்தில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 27.02.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 777 மையங்களில் நடக்கிறது.

மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 5 வயதிற்குட்பட்ட, 40,890 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த பணியில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு, 4 பேர் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,203 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து, தரமானதுடன் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது.

எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் முகாமுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On: 24 Feb 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...