/* */

குன்னூரில் யானை தாக்கி ஒருவர் பலி

குன்னூரில் யானை தாக்கி ஒருவர் இறந்தார். காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூரில் யானை தாக்கி ஒருவர் பலி
X

குன்னூரில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டுயானை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தது.

இந்த நிலையில் அருகே உள்ள அறை ஹட்டி கிராமத்திற்குள் நேற்று ஒற்றை காட்டுயானை புகுந்தது. நேற்று இரவு அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (56) என்பவர் தனது வீட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்போது புதர் மறைவிலிருந்த ஒற்றை காட்டு யானை லட்சுமணனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் . மேலும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்டி லட்சுமனின்உடலை மீட்டனர். ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 21 Aug 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்