Begin typing your search above and press return to search.
குன்னூரில் வரும் 17 ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
குன்னூரில் வரும் 17 ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமையில் வரும் 17ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
அப்போது குன்னூர், சிம்ஸ் பூங்கா, மவுண்ட் ரோடு, மவுண்ட் பிளசண்ட், எடப்பள்ளி, பேரக்ஸ், கிளன்டேல், சேலாஸ், உபதலை, குந்தா, ஆருகுச்சி, எடக்காடு, அதிகரட்டி, கோத்தகிரி, அரவேனு, வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, கீழ் கோத்தகிரி, நெடுகுளா பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.