/* */

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி

கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.

HIGHLIGHTS

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
X

குனியல் கிராம பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை.

சமீபகாலமாக கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அகழிகளை தாண்டி ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தாலும், ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. இரவில் மட்டுமே உலா வந்த காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 அளவில் குனியல் என்ற கிராமப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்பு மக்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...