/* */

கூடலூரில் காணாமல் போன நபர் தேயிலை தோட்டத்தில் பிணமாக கண்டெடுப்பு

இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்த நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

கூடலூரில் காணாமல் போன நபர் தேயிலை தோட்டத்தில் பிணமாக கண்டெடுப்பு
X

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் பிணம் கிடப்பதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், விசாரணை நடத்தியதில் தேவாலா போக்கர் காலனியை சேர்ந்த அபீப்(51) நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்று திடீரென மாயமானதால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அபீப் தேவாலா அருகே காட்டிமட்டம் பகுதியில்உள்ள தேயிலை தோட்டத்தில் பிணமாக கிடந்துள்ளார் என்பது தெரியவந்து. உடனடியாகதேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அபீப்பின் உடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக தெரிவித்தனர். இதனால் போலீசார் அபீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அபீப்பின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.

Updated On: 3 Aug 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...