/* */

கூடலூர் நகராட்சியை தூய்மையாக வைக்க ஐடியா குடுங்க! பரிசை அள்ளுங்க!

கூடலூர் நகராட்சியை தூய்மையாக வைக்க ஐடியா தருபவர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம்அறிவிப்பு

HIGHLIGHTS

கூடலூர் நகராட்சியை தூய்மையாக வைக்க ஐடியா குடுங்க! பரிசை அள்ளுங்க!
X

கூடலூர் நகராட்சியின் தூய்மைக்கு ஆலோசனை வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டுமென ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூடலூர் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக வைத்திருக்கவும், தினசரி உருவாகும் கழிவுகளை புதுமையான தொழில் நுட்ப ரீதியில் அகற்றுவதற்கும் புதுமையான யோசனைகள் வரவேற்கப்படுவதாக ஆணையாளர் கூறினார்.

இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு மாநில அளவில் பாராட்டு வெகுமதி வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக 5 லட்சம், இரண்டாம் பரிசு 2.5 லட்சம், மூன்றாம் பரிசு 1.5 லட்சம், நான்காம் பரிசாக ஒரு லட்சம், ஐந்தாம் பரிசாக 75 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

எனவே வரும் 6ஆம் தேதிக்குள் நகராட்சி பகுதியில் தூய்மையைப் பாதுகாக்க சிறந்த ஆலோசனை தெரிவிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்

Updated On: 2 Jan 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்