/* */

தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?

தொடர்ந்து 6 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் புலி இன்றாவது சிக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

HIGHLIGHTS

தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?
X

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை, தேவன் எஸ்டேட், மேபீல்டு போன்ற பகுதிகளில் புலி ஒன்று அடிக்கடி மாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வருவது வழக்கமாக உள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 3 மனிதர்களையும் இந்த புலி கொன்று ஆட்கொல்லி புலியாக மாறியுள்ளது.

மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்து சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதாக வனத்துறையினர் கூறியதை அடுத்து இப்பகுதி முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள், கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் மருத்துவ குழுவோடு இணைந்து 60-க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று பிரத்யேக உடை அணிந்து புலியை தேடுவதற்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்களோடு 3 வன கால்நடை மருத்துவக் குழுவும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தயாராகி உள்ளனர். அங்காங்கே புலி நடமாட்டம் உள்ளதா என கண்டறிய பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று மாலை இந்த ஆட்கொல்லி புலி இப்பகுதியிலிருந்து தேயிலைச் செடி வழியாக வனப்பகுதிக்குள் சென்று வனத்துறைக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் 6-வது நாளாக தொடர்ந்து வனத்துறை அப்பகுதியில் முகாமிட்டு புலியை பிடிப்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’