Begin typing your search above and press return to search.
நீர்நிலைகளை தேடி சாலையை கடக்கும் யானைகள்: கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுரை
வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக வறட்சி நிலவுவதால் நீர்நிலைகளைத் தேடி வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையை கடந்தது. எனவே குட்டியுடன் யானைகள் சாலையை கடக்கும் பொழுது வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.