/* */

முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது

கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.

HIGHLIGHTS

முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
X

காயத்துடன் பிடிபட்டு, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  35 வயது காட்டு யானை, சிகிச்சை பலனின்றி இறந்துது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தோட்டமூலா என்னும் பகுதியில், பிற யானைகளுடன் நடந்த மோதலில், ஆண் காட்டு யானைக்கு வால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 2 வருடமாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து, முதுமலையில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர்.

கடந்த ஜூன் 17 ம் தேதி, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை திடீரென உயிரிழந்தது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 July 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...